வாழ வழிதேடி இஸ்ரேல் சென்ற இலங்கையர் ஹமாசிடம் சிக்கி உயிரிழந்த சோகம்..!!

இஸ்ரேல் -ஹமாஸ் மோதலில் ஹமாசினால் பணயக்கைதியாக பிடிக்கப்பட்ட இலங்கையர் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேலிற்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

இலங்கைப் பிரஜையான சுஜித் பண்டார யட்டவர என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் பொலிஸார் தெரிவித்துள்ளனர். தங்களின் இன்டர்போல் பிரிவினரே இதனை உறுதிசெய்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த சுஜித்பண்டார யட்டவரவின் பிள்ளைகளின் மரபணுவை எடுத்து பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னர் இந்த முடிவிற்கு வந்துள்ளதாக தூதரகம் தெரிவித்துள்ளது. ஹமாஸ் தாக்குதலை மேற்கொண்டவேளை இலங்கையர் ஒருவர் காணாமல் போயிருந்தார் .

அதனை தொடர்ந்து அடையாளம் காணப்படாத உடல் ஒன்றை சுஜித் பண்டாரவின் பிள்ளைகளின் மரபணுவுடன் ஒப்பிட்டு சோதனை செய்தவேளை அது இலங்கையரினது உடல் என்பது உறுதியானது.

உயிரிழந்தவர் வென்னப்புவை சேர்ந்தவர் என்றும், கடந்த 2015 இல் வேலைவாய்ப்பிற்காக இஸ்ரேல் சென்றிருந்தாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related News

இலங்கையின் உதவி திட்டங்களை முன்னெடுக்க தயாராகும் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை!

இலங்கையில் தனது உதவித் திட்டங்களை முன்னெடுக்க பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை தயாராகி வருகின்றது. ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இது குறித்து பேசப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகள், ஊட்டச்சத்து செயற்றிட்டங்கள், பாடசாலை மாணவர்களுக்கான…

Read More
எலிக்காய்ச்சலில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு பின்பற்ற வேண்டி விடயங்கள் தொடர்பாக கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கருத்து!

யாழ்ப்பாண மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் என சந்தேகிக்கப்படும் நோய் பரவி வருவதால் பொதுமக்கள் சுகாதார ஆலோசனைகளை பின்பற்றி இந்த நோயிலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ளுமாறு யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கேட்டுக் கொண்டுள்ளார். யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள்…

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

கனடாவில் அறிமுகமாகும் புதிய சட்டம்!

கனடாவில் அறிமுகமாகும் புதிய சட்டம்!

இலங்கையின் உதவி திட்டங்களை முன்னெடுக்க தயாராகும் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை!

இலங்கையின் உதவி திட்டங்களை முன்னெடுக்க தயாராகும் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை!

எலிக்காய்ச்சலில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு பின்பற்ற வேண்டி விடயங்கள் தொடர்பாக கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கருத்து!

எலிக்காய்ச்சலில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு பின்பற்ற வேண்டி விடயங்கள் தொடர்பாக கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கருத்து!

அரிசியின் விலையில் வீழ்ச்சி – மேடற்கொள்ளப்படும் சோதனை நடவடிக்கைகள்!

அரிசியின் விலையில் வீழ்ச்சி – மேடற்கொள்ளப்படும்  சோதனை நடவடிக்கைகள்!

அநுராதபுரத்தில் வெடிபொருட்களுடன் ஒருவர் கைது!

அநுராதபுரத்தில் வெடிபொருட்களுடன் ஒருவர் கைது!

மஹிந்தவின் பாதுகாப்பில் எவ்வித குறைப்பும் மேற்கொள்ளப்படவில்லை!

மஹிந்தவின் பாதுகாப்பில் எவ்வித குறைப்பும் மேற்கொள்ளப்படவில்லை!