தென் ஆபிரிக்க மற்றும் இலங்கைக்கு இடையிலான டெஸ்ட் தொடர்!

தென் ஆபிரிக்காவுக்கு எதிராக ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரை முன்னிட்டு தெரிவு செய்யப்பட்ட 17 வீரர்களைக் கொண்ட இலங்கை டெஸ்ட் குழாத்தில் துடுப்பாட்ட வீரர் ஓஷத பெர்னாண்டோ, சுழல்பந்துவீச்சாளர் நிஷான் பீரிஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

நியூஸிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் பிரகாசிக்கத் தவறிய ரமேஷ் மெண்டிஸ் நீக்கப்பட்டுள்ளார்.

நீல் மெக்கென்ஸியின் கீழ் விசேட பயிற்சிகள் பெறுவதற்காக தென் ஆபிரிக்கா சென்ற இலங்கை அணித் தலைவர் தனஞ்சய டி சில்வா உட்பட 10 வீரர்கள் பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.எஞ்சிய 7 வீரர்கள் 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை இங்கிருந்து தென் ஆபிரிக்காவுக்கு புறப்படவுள்ளனர்.

மேலும் இலங்கைக்கும் தென் ஆபிரிக்காவுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி டேர்பன், கிங்ஸ்மீட் விiயாட்டரங்கில் நவம்பர் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

தொடர்ந்து 2ஆவதும் கடைசியுமான டெஸ்ட் போட்டி கெபெர்ஹா, சென். ஜோர்ஜஸ் பார்க் அரங்கில் டிசம்பர் 2ஆம் திகதி ஆரம்பமாகும்.

  • Related News

    இலங்கையில் கைதான இந்திய செல்வந்தர் பிரேம் தாக்கூர்

    டி10 கிரிக்கெட் தொடரில் இலங்கையில் கிரிக்கெட் ஆட்டநிர்ணய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட இந்தியரை டிசம்பர் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கையில் நடைபெற்றுவரும் டி10 கிரிக்கெட் தொடரில் காலி மார்வல்ஸ்(Galle Marvels) அணியின் இந்திய உரிமையாளர் ஆட்டநிர்ணய குற்றச்சாட்டில்…

    Read More
    லங்கா ரி 10 – கோல்மார்வல் உரிமையாளர் கைது!

    இலங்கையில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற லங்கா ரி 10 லீக் போட்டியில் கலந்து கொள்ளும் கோல்மார்வல்ஸ் அணியின் உரிமையாளரான இந்தியர் ஆட்டநிர்ணய சதி குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஆட்டநிர்ணய சதியில் ஈடுபடுமாறு வீரர் ஒருவரை கட்டாய படுத்திய வேலை இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

    Read More

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Read More

    கனடாவில் அறிமுகமாகும் புதிய சட்டம்!

    கனடாவில் அறிமுகமாகும் புதிய சட்டம்!

    இலங்கையின் உதவி திட்டங்களை முன்னெடுக்க தயாராகும் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை!

    இலங்கையின் உதவி திட்டங்களை முன்னெடுக்க தயாராகும் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை!

    எலிக்காய்ச்சலில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு பின்பற்ற வேண்டி விடயங்கள் தொடர்பாக கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கருத்து!

    எலிக்காய்ச்சலில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு பின்பற்ற வேண்டி விடயங்கள் தொடர்பாக கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கருத்து!

    அரிசியின் விலையில் வீழ்ச்சி – மேடற்கொள்ளப்படும் சோதனை நடவடிக்கைகள்!

    அரிசியின் விலையில் வீழ்ச்சி – மேடற்கொள்ளப்படும்  சோதனை நடவடிக்கைகள்!

    அநுராதபுரத்தில் வெடிபொருட்களுடன் ஒருவர் கைது!

    அநுராதபுரத்தில் வெடிபொருட்களுடன் ஒருவர் கைது!

    மஹிந்தவின் பாதுகாப்பில் எவ்வித குறைப்பும் மேற்கொள்ளப்படவில்லை!

    மஹிந்தவின் பாதுகாப்பில் எவ்வித குறைப்பும் மேற்கொள்ளப்படவில்லை!