சென்னையில் தார் சாலையில் போடப்பட்ட சிமெண்ட் பேட்சில் சறுக்கிய பைக்.. பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்

சென்னை: சென்னையில் தார் சாலையில் இருந்த பள்ளத்தை சரி செய்ய போடப்பட்ட சிமெண்ட் பேட்சில் இருசக்கர வாகனம் சறுக்கியதில் இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னையில் பல்வேறு சாலைகளில் பள்ளம் அதிகமாக காணப்படுகிறது.. சாலைகளில் உள்ள பள்ளம் காரணமாக விபத்து மற்றும் உயிரிழப்பு ஏற்படும் நிலையில், அதனை சரி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக உள்ளது..ஆனால் நடவடிக்கை என்பதோ ஆமை வேகத்தில் தான் எடுக்கப்படுவதாக புகார்கள் உள்ளது.

ஒரு சாலையில் பள்ளம் ஏற்பட்டால் அதில் யாராவது விபத்தில் சிக்கிய பிறகே நடவடிக்கை என்பது எடுக்கப்படுவதாக நீண்ட நாட்களாக குற்றச்சாட்டுகளும் உள்ளது. இதனிடைய வடகிழக்கு பருவ மழை தொடங்கி உள்ள நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் சாலைகள் புதிதாக போடப்படுகிறது. பல்வேறு பகுதிகளில் சாலைகள் போடப்படும் அதே நேரத்தில், சேதமடைந்த சாலைகள் பேட்ஜ் ஒர்க் செய்யப்படுகிறது.

சென்னை தங்கசாலை பெருமாள் கோயில் சந்திப்பில் சாலை பேட்ஜ் ஒர்க் செய்யும் பணி அண்மையில் நடந்துள்ளது. சாலைகளில் பேட்ஜ் ஒர்க்கிற்காக சிமெண்ட் பேட்ச் போடப்பட்டிருந்தது.. இந்நிலையில் இன்று காலை உத்தரகண்டைச் சேர்ந்த இளைஞர் பிரவீன் (27) இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தார். அப்போது சாலையில் இருந்த பள்ளத்தை சரி செய்ய அண்மையில் போடப்பட்ட சிமெண்ட பேச்சில் சறுக்கி விழுந்தார்.

இதனால் பின்னால் வந்த லாரியின் சக்கரம் ஏறியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பிரவீன் உயிரிழந்தார். பிரவீன் தலைகவசம் அணியாமல் வாகனம் ஓட்டியதால் விபத்தில் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. அதேநேரம் சாலை பணிகள் முடிக்கப்பட்டிந்தால் அவர் இறந்திருக்க வாய்ப்பு இல்லை என்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

  • Related News

    யாழின் நெற்பயிர் செய்கை நீரில் மூழ்கிய பாதிப்பு!

    நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாணம் – தென்மராட்சி பிரதேசத்தில் நெற்பயிர் செய்கைகள் முற்றாக நீரில் மூழ்கியுள்ளன. ஏழுதுமட்டுவாழ், மிருசுவில், கரம்பகம், மந்துவில், மீசாலை, சரசாலை, மட்டுவில், அல்லாரை , கச்சாய், கைத்தடி, நாவற்குழி, தச்சன் தோப்பு மற்றும் தனக்கிளப்பு…

    Read More
    இலங்கையின் பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று!

    இலங்கையின் பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது பாராளுமன்ற கன்னி அமர்வு இன்று (21) ஆரம்பமாகவுள்ளது. பாராளுமன்ற முதலாவது அமர்வில் சபாநாயகர் தெரிவுசெய்யப்படுவார். சிரேஷ்டத்துவம் மற்றும் தகைமை அடிப்படையில் சபாநாயகர் தெரிவு செய்யப்படுவார். சபாநாயகர் பதவிக்கு இருவரின் பெயர்கள் முன்மொழியப்பட்டால் இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படும்.…

    Read More

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Read More

    கனடாவில் அறிமுகமாகும் புதிய சட்டம்!

    கனடாவில் அறிமுகமாகும் புதிய சட்டம்!

    இலங்கையின் உதவி திட்டங்களை முன்னெடுக்க தயாராகும் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை!

    இலங்கையின் உதவி திட்டங்களை முன்னெடுக்க தயாராகும் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை!

    எலிக்காய்ச்சலில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு பின்பற்ற வேண்டி விடயங்கள் தொடர்பாக கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கருத்து!

    எலிக்காய்ச்சலில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு பின்பற்ற வேண்டி விடயங்கள் தொடர்பாக கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கருத்து!

    அரிசியின் விலையில் வீழ்ச்சி – மேடற்கொள்ளப்படும் சோதனை நடவடிக்கைகள்!

    அரிசியின் விலையில் வீழ்ச்சி – மேடற்கொள்ளப்படும்  சோதனை நடவடிக்கைகள்!

    அநுராதபுரத்தில் வெடிபொருட்களுடன் ஒருவர் கைது!

    அநுராதபுரத்தில் வெடிபொருட்களுடன் ஒருவர் கைது!

    மஹிந்தவின் பாதுகாப்பில் எவ்வித குறைப்பும் மேற்கொள்ளப்படவில்லை!

    மஹிந்தவின் பாதுகாப்பில் எவ்வித குறைப்பும் மேற்கொள்ளப்படவில்லை!