கொக்கு போல காத்திருப்போம்…2026இல் தமிழகத்தில் ஆட்சியை தூக்குவோம் – அண்ணாமலை…!!!

தமிழ்நாடு

தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இப்போது “என் மண் என் மக்கள்” என்ற பெயரில் யாத்திரை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் அவர் திருச்சி கிழக்கு மற்றும் மேற்கு தொகுதிகளில் நடைபயம் மேற்கொண்டார். இதற்கிடையே நேற்று பாஜக தலைமையகமான கமலாலயத்தில் பெருங்கோட்டப் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது,

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “என் மண் என் மக்கள் யாத்திரை இப்போது 103 தொகுதியை நிறைவு செய்துள்ளது. அடுத்த கட்ட நடைப்பயணம் 15ஆம் தேதி மீண்டும் ஆரம்பிக்க உள்ளது. இந்த பாத யாத்திரையில் எனக்கு மிகப் பெரிய அனுபவம் கிடைத்திருக்கிறது. மக்களிடையே பாத யாத்திரைக்கான வரவேற்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கட்சி சாராத பலரும் கூட இதில் கலந்து கொள்கிறார்கள்.

சென்னையில் இருந்து கொண்டு ஆட்சி நன்றாக இருப்பதாக திமுகவினர் சொல்கிறார்கள். பல ஊர்களுக்குச் சென்றால் கள நிலவரம் அவர்களுக்குப் புரியும். மக்களிடையே அதிருப்தி இருக்கிறது. நடைபணத்தில் பலரும் ஆட்சி சரி இல்லை என்று தங்களிடம் முறையிடுகிறார்கள். குறிப்பாக விவசாயிகளைப் பிரச்சனை மிகவும் அதிகமாக இருக்கும் நிலையில், எல்லா இடங்களிலும் குறைகளை மட்டுமே பார்க்க முடிகிறது என தெரிவித்தார்.

மேலும் அவர் பேசுகையில், சில அரசியல் தலைவர்கள் கொக்கு மீன் என்றெல்லாம் ஏதேதோ சொல்கிறார்கள். நாங்கள் அரசியலில் கொக்கை போலப் பொறுமையாக இருப்போம். கொக்கு போலப் பொறுமையாக காத்திருந்து மீன்பிடிக்கும் திறன் பாஜகவுக்கு இருக்கிறது. அது 2026இல் உங்களுக்குத் தெரியும். மற்ற கட்சிகளுக்கு எங்கள் பலம் 2026இல் தெரியும். மக்கள் நல்லாசியுடன் 2026இல் ஆட்சியைப் பிடிப்போம் என்று அவர் தெரிவித்தார்.

Related News

யாழின் நெற்பயிர் செய்கை நீரில் மூழ்கிய பாதிப்பு!

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாணம் – தென்மராட்சி பிரதேசத்தில் நெற்பயிர் செய்கைகள் முற்றாக நீரில் மூழ்கியுள்ளன. ஏழுதுமட்டுவாழ், மிருசுவில், கரம்பகம், மந்துவில், மீசாலை, சரசாலை, மட்டுவில், அல்லாரை , கச்சாய், கைத்தடி, நாவற்குழி, தச்சன் தோப்பு மற்றும் தனக்கிளப்பு…

Read More
இறுதி தீர்ப்பு இறைவன் கையில் – மேல்முறையீட்டு மனு குறித்து விரக்தியாக பேசிய ஓபிஎஸ்…!!!

தமிழ்நாடு மதுரை விமான நிலையத்தில் தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் கூட்டுத்துறை என்பது மிகவும் முக்கியமான துறை, மத்திய அரசு வழங்கும் நலத்திட்டங்களை ஏழை எளியவர்களுக்கு வழங்கும் துறைதான் கூட்டுறவுத் துறை. இந்த…

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

கனடாவில் அறிமுகமாகும் புதிய சட்டம்!

கனடாவில் அறிமுகமாகும் புதிய சட்டம்!

இலங்கையின் உதவி திட்டங்களை முன்னெடுக்க தயாராகும் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை!

இலங்கையின் உதவி திட்டங்களை முன்னெடுக்க தயாராகும் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை!

எலிக்காய்ச்சலில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு பின்பற்ற வேண்டி விடயங்கள் தொடர்பாக கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கருத்து!

எலிக்காய்ச்சலில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு பின்பற்ற வேண்டி விடயங்கள் தொடர்பாக கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கருத்து!

அரிசியின் விலையில் வீழ்ச்சி – மேடற்கொள்ளப்படும் சோதனை நடவடிக்கைகள்!

அரிசியின் விலையில் வீழ்ச்சி – மேடற்கொள்ளப்படும்  சோதனை நடவடிக்கைகள்!

அநுராதபுரத்தில் வெடிபொருட்களுடன் ஒருவர் கைது!

அநுராதபுரத்தில் வெடிபொருட்களுடன் ஒருவர் கைது!

மஹிந்தவின் பாதுகாப்பில் எவ்வித குறைப்பும் மேற்கொள்ளப்படவில்லை!

மஹிந்தவின் பாதுகாப்பில் எவ்வித குறைப்பும் மேற்கொள்ளப்படவில்லை!