கரூர் திமுக மேயர் 3 மாதத்தில் ஜெயிலுக்கு போவது உறுதி – சத்தியம் செய்த அண்ணாமலை..!!

தமிழ்நாடு

என் மண் என் மக்கள் என்ற முழக்கத்தோடு தனது சொந்த மாவட்டமான கரூரில் பாதயாத்திரை நடத்திய அண்ணாமலை மக்கள் மத்தியில் உரையாற்றினார். இதன்போது, கரூர் மேயர் கவிதாவை ரவுடிக் கும்பலுக்கு தலைவி என்றும் வருமான வரித்துறைத் துறை அதிகாரிகளை தாக்கிய வழக்கிலிருந்து கவிதா ஒரு போதும் தப்ப முடியாது எனவும் அண்ணாமலை காட்டமாக எச்சரித்துள்ளார்.

ஐ.ஆர்.எஸ். அதிகாரிகளை தாக்கிய வழக்கில் முதல் குற்றவாளியே கரூர் மேயர் கவிதா தான் என்றும் தாங்கள் பெட்டிஷன் போடவுள்ளதாகவும் மேயர் கவிதா எங்கே தப்பித்துச் செல்கிறார் என பார்த்துவிடுகிறோம் எனவும் அனல் கக்கினார் அண்ணாமலை.

செந்தில்பாலாஜியே இன்னும் உள்ளே தான் இருக்கிறார் என்றும் அவரை விட கரூர் மேயர் கவிதா என்ன பெரிய ஆளா என வினவிய அண்ணாமலை, இன்னும் ஒரு மாதம், இரண்டு மாதம் வேண்டுமானால் ஆகலாம் ஆனால் மூன்று மாதத்தில் உள்ளே செல்வது உறுதி என அடித்துக் கூறினார்.

மத்திய அரசு அதிகாரிகள் மீது கை வைத்திருக்கிறீர்கள் அது சிபிஐ விசாரணைக்கு போகாதா என்று கேள்வி எழுப்பிய அண்ணாமலை, கரூர் மேயர் கவிதா எங்கேயும் தப்பி ஓட முடியாது என சவால் விடுத்தார். கரூர் மேயர் கவிதா வெளியே இருக்கும் வரை சந்தோஷமாக இருந்துக் கொள்ளட்டும் என்றும் அதுவரை பாஜகவின் ப்ளக்ஸ் பேனர்களை கிழிப்பது, போஸ்டர்களை கிழிப்பது போன்ற பணிகளை பார்த்துக்கொள்ளட்டும் எனவும் உள்ளே சென்றுவிட்டால் இதை செய்ய முடியாது எனவும் கலாய்த்தார்.

ரொம்ப ஆடக்கூடாது என்றும் ஆடியவர்கள் எல்லாமே இன்று உள்ளே இருக்கிறார்கள் எனவும் கூறிய அண்ணாமலை, நடப்பதை எல்லாம் ஆண்டவன் பார்த்துக் கொண்டிருப்பதாக கூறினார். கரூரில் இல்லாத கெட்டப்பழக்கம் எதுவும் இல்லை என்று சொல்லும் அளவுக்கு மது கலாச்சாரம், போதை கலாச்சாரம் கரூருக்கு வந்துவிட்டதாகவும் இதனை தடுக்க வேண்டியவர்கள் தடுக்கத் தவறிவிட்டதாகவும் சாடினார்.

Related News

யாழின் நெற்பயிர் செய்கை நீரில் மூழ்கிய பாதிப்பு!

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாணம் – தென்மராட்சி பிரதேசத்தில் நெற்பயிர் செய்கைகள் முற்றாக நீரில் மூழ்கியுள்ளன. ஏழுதுமட்டுவாழ், மிருசுவில், கரம்பகம், மந்துவில், மீசாலை, சரசாலை, மட்டுவில், அல்லாரை , கச்சாய், கைத்தடி, நாவற்குழி, தச்சன் தோப்பு மற்றும் தனக்கிளப்பு…

Read More
இறுதி தீர்ப்பு இறைவன் கையில் – மேல்முறையீட்டு மனு குறித்து விரக்தியாக பேசிய ஓபிஎஸ்…!!!

தமிழ்நாடு மதுரை விமான நிலையத்தில் தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் கூட்டுத்துறை என்பது மிகவும் முக்கியமான துறை, மத்திய அரசு வழங்கும் நலத்திட்டங்களை ஏழை எளியவர்களுக்கு வழங்கும் துறைதான் கூட்டுறவுத் துறை. இந்த…

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

கனடாவில் அறிமுகமாகும் புதிய சட்டம்!

கனடாவில் அறிமுகமாகும் புதிய சட்டம்!

இலங்கையின் உதவி திட்டங்களை முன்னெடுக்க தயாராகும் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை!

இலங்கையின் உதவி திட்டங்களை முன்னெடுக்க தயாராகும் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை!

எலிக்காய்ச்சலில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு பின்பற்ற வேண்டி விடயங்கள் தொடர்பாக கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கருத்து!

எலிக்காய்ச்சலில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு பின்பற்ற வேண்டி விடயங்கள் தொடர்பாக கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கருத்து!

அரிசியின் விலையில் வீழ்ச்சி – மேடற்கொள்ளப்படும் சோதனை நடவடிக்கைகள்!

அரிசியின் விலையில் வீழ்ச்சி – மேடற்கொள்ளப்படும்  சோதனை நடவடிக்கைகள்!

அநுராதபுரத்தில் வெடிபொருட்களுடன் ஒருவர் கைது!

அநுராதபுரத்தில் வெடிபொருட்களுடன் ஒருவர் கைது!

மஹிந்தவின் பாதுகாப்பில் எவ்வித குறைப்பும் மேற்கொள்ளப்படவில்லை!

மஹிந்தவின் பாதுகாப்பில் எவ்வித குறைப்பும் மேற்கொள்ளப்படவில்லை!