கனடா விமானம் மீது தாக்குதல் நடத்த முயன்ற சீனா – நடுவானில் பரபரப்பு…!!

கடந்த ஞாயிற்றுக்கிழமை தென் சீனக் கடலின் சர்வதேச கடற்பகுதியில் சீனப் போர் விமானம் தங்களது ராணுவ ஹெலிகாப்டர் மீது தீப்பொறிகளை வீசி தாக்குதலுக்கு முயன்றதாக கனடா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எச்எம்சிஎஸ் ஒட்டாவாவின் ராயல் கனடா கடற்படை போர்க்கப்பலின் விமான அதிகாரி மேஜர் ராப் மில்லன், இந்த பொறுப்பற்ற செயல் விமானத்தை வீழ்த்தியிருக்கலாம் என்று கூறினார்.

சீனாவின் ஜே 11 ரக போர் விமானம், தங்களது ஃபரைகேட் சிகோர்ஸ்கை ஹெலிகாப்டர் அருகே நெருங்கி தாக்குதல் ஏற்படுத்தும் விதமாக வந்ததாக கனடா குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது.

இந்த செயல் மிகப் பெரிய துயரத்தை ஏற்படுத்தியிருக்ககூடும் எனவும் தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தின் போது 200 அடி கனடா ஹெலிகாப்டர் விலகி சென்று மோதலை தவிர்த்துள்ளது.

சர்வதேச கடற்பரப்பில் கனடா – சீனா நாடுகளுக்கு இடையே இரண்டாவது முறையாக விமான மோதல் நிகழ்ந்துள்ளது. தென் சீன கடற்பரப்பில் 1.3 மில்லியன் சதுர மைல் அளவில் ஆக்கிரமிப்பு செய்துள்ளது. இதில் சிறிய மணல் திட்டுக்கள், பாறைகளை உருவாக்கி ஆயுதம் கொண்ட தீவுகளாக மாற்றியுள்ளது. சீனா உரிமை கோரும் பகுதி முக்கியத்துவம் வாய்ந்த சர்வதேச வர்த்தக பாதையாக அமைந்துள்ளது. இதற்கிடையே தைவான் ஜலசந்தி பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. கனடா, அமெரிக்காவின் போர்க்கப்பல் நவம்பர் 1ஆம் திகதி தைவான் ஜலசந்தி பகுதியில் சென்றதால் சீனா தரப்பில் எதிர்ப்பலைகள் எழுந்துள்ளன.

Related News

கனேடிய பிரதமர் அமெரிக்காவிற்கு விஜயம்

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அமெரிக்காவிற்கு விஜயம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரையில் அமெரிக்காவின் காலிபோர்னியா மாநிலத்தில் சென் பிரான்சிஸ்கோவில் நடைபெறவுள்ள ஆசிய பசுபிக் பொருளாதார ஒத்துழைப்பு (ஆசியான்)…

Read More
கனடாவில் வேலை வாய்ப்பு பெற்றுக் கொள்ள காத்திருப்பவருக்கு மகிழ்ச்சி செய்தி

கனடாவின் ஒன்றாறியோ மாகாணத்தில் வேலை வாய்ப்பு பெற்றுக் கொள்வதற்காக காத்திருப்பவருக்கு மாகாண அரசாங்கம் மகிழ்ச்சி செய்தி ஒன்றை வெளியேற்றுள்ளது. தொழிலுக்காக விண்ணப்பம் செய்பவர்கள் கனடிய தொழில் அனுபவம் தொடர்பில் கவலை கொள்ள தேவையில்லை என அறிவித்துள்ளது. தொழில் தகைமைகளில் கனடிய பணி…

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

கனடாவில் அறிமுகமாகும் புதிய சட்டம்!

கனடாவில் அறிமுகமாகும் புதிய சட்டம்!

இலங்கையின் உதவி திட்டங்களை முன்னெடுக்க தயாராகும் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை!

இலங்கையின் உதவி திட்டங்களை முன்னெடுக்க தயாராகும் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை!

எலிக்காய்ச்சலில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு பின்பற்ற வேண்டி விடயங்கள் தொடர்பாக கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கருத்து!

எலிக்காய்ச்சலில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு பின்பற்ற வேண்டி விடயங்கள் தொடர்பாக கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கருத்து!

அரிசியின் விலையில் வீழ்ச்சி – மேடற்கொள்ளப்படும் சோதனை நடவடிக்கைகள்!

அரிசியின் விலையில் வீழ்ச்சி – மேடற்கொள்ளப்படும்  சோதனை நடவடிக்கைகள்!

அநுராதபுரத்தில் வெடிபொருட்களுடன் ஒருவர் கைது!

அநுராதபுரத்தில் வெடிபொருட்களுடன் ஒருவர் கைது!

மஹிந்தவின் பாதுகாப்பில் எவ்வித குறைப்பும் மேற்கொள்ளப்படவில்லை!

மஹிந்தவின் பாதுகாப்பில் எவ்வித குறைப்பும் மேற்கொள்ளப்படவில்லை!