கனடா பிரஜைகளுக்கு மீண்டும் விசா வழங்கும் இந்தியா…!!

கனடா பிரஜைகளுக்கு இந்தியா மீண்டும் விசா வழங்கத் தொடங்கவுள்ளதாக கனடாவில் உள்ள இந்தியத் தூதரகம் நேற்று (25) அறிவித்துள்ளது.

இந்நடவடிக்கை இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் பதற்றத்தைக் குறைக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.

கடந்த ஜூன் மாதம் கனடியச் சீக்கியத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக்கொல்லப்பட்டார். அதன் பின்னணியில் இந்திய அரசாங்கத்துக்குத் தொடர்பிருக்கக்கூடும் என்று கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியிருந்தார்.

இந்தியா அந்தக் குற்றச்சாட்டை மறுத்தது.

சீக்கியத் தலைவர் கொல்லப்பட்டது குறித்த விசாரணையில் ஒத்துழைக்குமாறு கனடா இந்தியாவிடம் கேட்டுக்கொண்டது.

கனடாவும் இந்தியாவும் தத்தம் நாட்டிலுள்ள தூதர்களை வெளியேற்றின.

இதனால் கனடா பிரஜைகளுக்கு விசா வழங்குவதை இந்தியா தற்காலிகமாக நிறுத்தியிருந்தது.

இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் பூசலின் காரணமாகச் கடந்த வாரம் கனடா இந்தியாவிலிருந்து 41 அரசதந்திரிகளை மீட்டுக்கொண்டது.

Related News

கனேடிய பிரதமர் அமெரிக்காவிற்கு விஜயம்

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அமெரிக்காவிற்கு விஜயம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரையில் அமெரிக்காவின் காலிபோர்னியா மாநிலத்தில் சென் பிரான்சிஸ்கோவில் நடைபெறவுள்ள ஆசிய பசுபிக் பொருளாதார ஒத்துழைப்பு (ஆசியான்)…

Read More
கனடாவில் வேலை வாய்ப்பு பெற்றுக் கொள்ள காத்திருப்பவருக்கு மகிழ்ச்சி செய்தி

கனடாவின் ஒன்றாறியோ மாகாணத்தில் வேலை வாய்ப்பு பெற்றுக் கொள்வதற்காக காத்திருப்பவருக்கு மாகாண அரசாங்கம் மகிழ்ச்சி செய்தி ஒன்றை வெளியேற்றுள்ளது. தொழிலுக்காக விண்ணப்பம் செய்பவர்கள் கனடிய தொழில் அனுபவம் தொடர்பில் கவலை கொள்ள தேவையில்லை என அறிவித்துள்ளது. தொழில் தகைமைகளில் கனடிய பணி…

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

கனடாவில் அறிமுகமாகும் புதிய சட்டம்!

கனடாவில் அறிமுகமாகும் புதிய சட்டம்!

இலங்கையின் உதவி திட்டங்களை முன்னெடுக்க தயாராகும் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை!

இலங்கையின் உதவி திட்டங்களை முன்னெடுக்க தயாராகும் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை!

எலிக்காய்ச்சலில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு பின்பற்ற வேண்டி விடயங்கள் தொடர்பாக கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கருத்து!

எலிக்காய்ச்சலில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு பின்பற்ற வேண்டி விடயங்கள் தொடர்பாக கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கருத்து!

அரிசியின் விலையில் வீழ்ச்சி – மேடற்கொள்ளப்படும் சோதனை நடவடிக்கைகள்!

அரிசியின் விலையில் வீழ்ச்சி – மேடற்கொள்ளப்படும்  சோதனை நடவடிக்கைகள்!

அநுராதபுரத்தில் வெடிபொருட்களுடன் ஒருவர் கைது!

அநுராதபுரத்தில் வெடிபொருட்களுடன் ஒருவர் கைது!

மஹிந்தவின் பாதுகாப்பில் எவ்வித குறைப்பும் மேற்கொள்ளப்படவில்லை!

மஹிந்தவின் பாதுகாப்பில் எவ்வித குறைப்பும் மேற்கொள்ளப்படவில்லை!