ஓபிஎஸ் அடிக்கும் கடைசி அடி மரண அடி – என்ன வைத்திலிங்கம் இப்படி சொல்லிட்டாரு..!!

தமிழ்நாடு

அதிமுகவில் உட்கட்சி பிரச்சினை எழுந்ததிலிருந்தே எடப்பாடி பழனிசாமியின் கையே ஓங்கியுள்ளது. ஜூலை 11 பொதுக்குழுவில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை நீக்கியது செல்லும் என்று உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் ஆகியவை தீர்ப்புகள் வழங்கின.

தற்போது ஓபிஎஸ் தரப்பு அதிமுகவின் கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக நேற்று புதுச்சேரியில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “கரைவேட்டி கட்டும் தகுதியை ஓ.பன்னீர்செல்வம் இழந்துவிட்டார். எம்ஜிஆர் மாளிகையை அதிமுகவினர் கோவிலாக கருதுகின்றனர். அங்கு குண்டர்களோடு புகுந்து அராஜகம் செய்தார் ஓபிஎஸ். தொடர்ந்து கட்சி விரோத செயல்களில் இறங்கினார். இப்போது ஹை கோர்ட் அதிமுக பெயரையோ, கட்சி கொடி, சின்னத்தை பயன்படுத்துக்கூடாது என தீர்ப்பு அளித்துள்ளது. இதை அதிமுகவினர் மகிழ்ச்சியாக கொண்டாடுகின்றனர்.

எதிரிகள், துரோகிகளுக்கு இந்த தீர்ப்பு பாடமாக அமைந்துள்ளது. இனி அவர் கரை வேட்டியை கட்ட முடியாது. வேறு கலரில் தான் வேட்டி கட்ட வேண்டும். கட்சியின் பெயரை பயன்படுத்தினால் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குதான் தொடர வேண்டும் என்றார்.

இந்நிலையில் உயர் நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து நேற்று சென்னை கிரீன்வேஸ் சாலையில் அமைந்துள்ள ஓ.பன்னீர் செல்வத்தின் வீட்டில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் ஓபிஎஸ், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.

ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த வைத்திலிங்கம், “கரை வேட்டியை பயன்படுத்தக் கூடாது என்று யாரும் கூற முடியாது. அது அவரவர் தனிப்பட்ட உரிமை. இதை தவறா பரப்பிகிட்டு இருக்காங்க, சினிமாவில் வரும் ஹீரோ மாதிரி ஓபிஎஸ் அடி வாங்கிக் கொண்டே இருப்பார். கடைசியில் ஒரே ஒரு அடி; வில்லன் அவுட் ஆயிடுவான். அந்த கதை நடக்கும்” என்று கூறினார்.

Related News

யாழின் நெற்பயிர் செய்கை நீரில் மூழ்கிய பாதிப்பு!

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாணம் – தென்மராட்சி பிரதேசத்தில் நெற்பயிர் செய்கைகள் முற்றாக நீரில் மூழ்கியுள்ளன. ஏழுதுமட்டுவாழ், மிருசுவில், கரம்பகம், மந்துவில், மீசாலை, சரசாலை, மட்டுவில், அல்லாரை , கச்சாய், கைத்தடி, நாவற்குழி, தச்சன் தோப்பு மற்றும் தனக்கிளப்பு…

Read More
இறுதி தீர்ப்பு இறைவன் கையில் – மேல்முறையீட்டு மனு குறித்து விரக்தியாக பேசிய ஓபிஎஸ்…!!!

தமிழ்நாடு மதுரை விமான நிலையத்தில் தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் கூட்டுத்துறை என்பது மிகவும் முக்கியமான துறை, மத்திய அரசு வழங்கும் நலத்திட்டங்களை ஏழை எளியவர்களுக்கு வழங்கும் துறைதான் கூட்டுறவுத் துறை. இந்த…

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

கனடாவில் அறிமுகமாகும் புதிய சட்டம்!

கனடாவில் அறிமுகமாகும் புதிய சட்டம்!

இலங்கையின் உதவி திட்டங்களை முன்னெடுக்க தயாராகும் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை!

இலங்கையின் உதவி திட்டங்களை முன்னெடுக்க தயாராகும் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை!

எலிக்காய்ச்சலில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு பின்பற்ற வேண்டி விடயங்கள் தொடர்பாக கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கருத்து!

எலிக்காய்ச்சலில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு பின்பற்ற வேண்டி விடயங்கள் தொடர்பாக கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கருத்து!

அரிசியின் விலையில் வீழ்ச்சி – மேடற்கொள்ளப்படும் சோதனை நடவடிக்கைகள்!

அரிசியின் விலையில் வீழ்ச்சி – மேடற்கொள்ளப்படும்  சோதனை நடவடிக்கைகள்!

அநுராதபுரத்தில் வெடிபொருட்களுடன் ஒருவர் கைது!

அநுராதபுரத்தில் வெடிபொருட்களுடன் ஒருவர் கைது!

மஹிந்தவின் பாதுகாப்பில் எவ்வித குறைப்பும் மேற்கொள்ளப்படவில்லை!

மஹிந்தவின் பாதுகாப்பில் எவ்வித குறைப்பும் மேற்கொள்ளப்படவில்லை!